
சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழந்த சோகம்
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக வந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடைவீதி அருகே சங்கர் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அவர் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கர் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தநிலையில், மதில் சுவரின் மறுபுறம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீதும் பேருந்து மோதியதால் அவரும் உயிரிழந்தார்.
பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்ததாக தூய்மைப் பணியாளர் சரண்யா, சங்கர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தலைமறைவான பேருந்து ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






