சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
x
Daily Thanthi 2025-08-31 06:18:42.0
t-max-icont-min-icon

சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் - வானிலை ஆய்வு மையம்

சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. அளவுக்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன்படி மணலி புதுநகரில் 26 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story