மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மேற்கு வங்க அரசு

போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்க அரசு போராடும் மருத்துவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





