வலி நிறைந்த நாட்கள்... “மரியான்” படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி


வலி நிறைந்த நாட்கள்... “மரியான்” படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
x
தினத்தந்தி 12 Jan 2026 3:27 PM IST (Updated: 12 Jan 2026 3:29 PM IST)
t-max-icont-min-icon

தனுஷின் ‘மரி​யான்’ படப்​பிடிப்​பில் தான் மோச​மான அனுபவத்தைச் சந்​தித்​த​தாக நடிகை பார்வதி தெரிவித்துள்​ளார்.

மலை​யாள நடிகை​யான பார்​வ​தி, தமிழில் வெளி​யான ‘பூ’, ‘மரியான்’, ‘உத்​தம வில்லன்’, ‘சென்னையில் ஒருநாள்’, ‘தங்​கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்​துள்​ளார். மலையாள சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அவர் சமீபத்​தில் அளித்​துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரி​யான்’ படப்பிடிப்பின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்க​வில்லை என்று வருத்​தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “‘மரி​யான்’ படத்தின் ஒரு காட்​சி​யில் தண்​ணீரில் முழுவதுமாக நனைந்​த​படி நடித்​தேன். அது கதா​நாயக​னுடன் வரும் காதல் காட்​சி. அப்​போது மாற்று​வதற்கு நான் உடைகள் கொண்டு வரவில்​லை. என் தேவை​களைக் கவனித்துக்கொள்ள அங்கும் யாரும் இல்​லை. ஒரு கட்டத்தில், உடை மாற்​று​வதற்​காக நான் என் ஓட்​டல் அறைக்குச் செல்ல வேண்​டும் என்று சொல்ல வேண்டியிருந்​தது. அதற்கு அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை. எனக்கு ‘பீரியட்’ என்​றும், நான் கண்​டிப்​பாகச் செல்ல வேண்​டும் என்றும் சத்​த​மாகச் சொன்​னேன்” என்ற பார்வதி, ‘மரி​யான்’ படப்பிடிப்​புத் தளத்​தில், தன்​னைச் சேர்த்து மொத்​தம் 3 பெண்​கள் மட்டுமே பணிபுரிந்ததாகவும் அது தனக்கு கடின​மாக இருந்ததாகவும் தனக்​கு ஆதர​வாக அங்குயாரு​மில்லை என்​றும் தெரிவித்​துள்​ளார்.

1 More update

Next Story