நாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வு


நாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:29 AM IST (Updated: 17 Aug 2023 10:45 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி நாமக்கல் தினசரி சந்தையில் நேற்று பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

நாமக்கல்

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 3 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. ஆடி அமாவாசையையொட்டி அவற்றின் விலையும் சற்று உயர்ந்தே காணப்பட்டது.

கடந்த 12-ந் தேதி கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.240-க்கும், 12-ந் தேதி கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை பூக்கள், நேற்று கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் கடந்த 12-ந் தேதி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது. ஆனால் கடந்த 12-ந் தேதி கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூக்கள் மட்டும் நேற்று கிலோவுக்கு ரூ.60 குறைந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.

ஆடி அமாவாசையையொட்டி பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story