ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 195 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 22 ஆயிரத்து 704 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,131 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 301 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
588 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 942 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 304 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 834 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
192 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 1,103 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 809 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
கடந்த ஒரு மாதத்திற்குமேல் தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை நேற்றும், இன்றும் வெகுவாக ஏற்றம் பெற தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






