ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் இறுதி நாளான இன்று (14.11.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 30 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 910 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 135 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 517 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 95 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 491 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 84 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 562 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
38 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 865 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 204 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 649 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






