ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று (19.11.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 142 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 26 ஆயிரத்து 52 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 316 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 216 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 96 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 643 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 513 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 186 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
83 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 378 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






