கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் இறுதிநாளான இன்று (22.08.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 195 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 888 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 568 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 186 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேபோல், 245 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 327 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 693 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 306 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
34 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 955 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 659 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 4747 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.






