கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
வாரத்தின் முதல்நாளான இன்று (28.07.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 161 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 674 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 470 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 202 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 604 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 583 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 879 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
81 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 847 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 846 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 221 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






