திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டம் பஹ்ரிபாரா கிராமத்தில் நேற்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்தி கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவை கிராமத்தை சேர்ந்த பலர் சாப்பிட்டனர்.
இந்நிலையில், அந்த உணவு சாப்பிட்ட பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் மொத்தம் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 37 பேர் சிறுவர், சிறுமியர் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story