அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று மாலை 6.36 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
அருணாச்சல பிரதேசத்தின் திராப் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 6.36 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் 7 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 27.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
EQ of M: 3.5, On: 28/07/2025 18:36:23 IST, Lat: 27.06 N, Long: 95.42 E, Depth: 7 Km, Location: Tirap, Arunachal Pradesh. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/LYqlhAWJnR
— National Center for Seismology (@NCS_Earthquake) July 28, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





