காசி தமிழ் சங்கமம் 4.0 - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

லக்னோ,

வாரணாசி - தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்புகளை புதுப்பிக்கவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், கொண்டாடவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 4-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் 4.0 கடந்த 2-ந்தேதி வாரணாசியில் தொடங்கப்பட்டது. இதனை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாரணாசியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியின் கருப்பொருள் "தமிழ் கற்போம் - தமிழ் கற்கலாம்" என்பதாகும். இது இந்நிகழ்வின் ஒருங்கிணைந்த அம்சமாக இருக்கும். அனைத்து இந்திய மொழிகளும் நமது மொழிகள் மற்றும் ஒரே பாரத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்ற செய்தியைப் பரப்புவதற்காக இந்த கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com