வார விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளது. 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் வார விடுமுறை தினமான இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குணா குகை, பில்லர் ராக், பைன்மரக் காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பிரையண்ட் பூங்கா உள்ளிட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






