சாத்தூர் அருகே அதிகாரிகள் திடீர் ஆய்வு - பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

விஜயகரிசல்குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர்.
சாத்தூர் அருகே அதிகாரிகள் திடீர் ஆய்வு - பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
Published on

சாத்தூர்,

விருதுநகரில் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் நேற்று வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட 4 வெடிவிபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணமாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் விஜயகரிசல்குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 10 குழுக்கள் நடத்திய சோதனையில் 5 வீடுகளில் சட்டவிரோதமாக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com