ராமேஸ்வரம்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கடற்கரை பூங்கா எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராமேசுவரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் தங்கச்சிமடத்தை சேர்ந்த மரியகெல்டன்(வயது 35) என ெதரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story






