மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை,
தென்மேற்கு ரெயில்வே மண்டலத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புத்தாண்டு விடுமுறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06283) மைசூருவில் இருந்து வருகிற 23-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு பெங்களூருவுக்கும், மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையமும் வந்தடைகிறது. பகல் 11 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06284) வருகிற 24-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு பெங்களூருவுக்கும், காலை 7.45 மணிக்கு மைசூருவுக்கும் சென்றடைகிறது.
இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரெயில் மாண்டியா, மட்டூர், சென்னபட்டணா, ராமநகரம், கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் (2-ம் கேட்) ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.






