இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 April 2025 4:57 PM IST
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 7ம் தேதி 3.45 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
- 1 April 2025 4:55 PM IST
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடியில் வேலை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
- 1 April 2025 2:33 PM IST
ஏப்.2 முதல் 5 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 1 April 2025 1:54 PM IST
சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.2,750 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
- 1 April 2025 1:01 PM IST
திரிணாமுல் காங்கிரசார் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் பல்வேறு விவகாரங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
- 1 April 2025 12:45 PM IST
கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
- 1 April 2025 12:38 PM IST
கோவையில் நூலகம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 1 April 2025 12:02 PM IST
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.