இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
x
தினத்தந்தி 1 April 2025 9:30 AM IST (Updated: 1 April 2025 8:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 April 2025 4:57 PM IST

    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 7ம் தேதி 3.45 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

  • 1 April 2025 4:55 PM IST

    கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடியில் வேலை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • 1 April 2025 3:52 PM IST

    குஜராத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

  • 1 April 2025 3:29 PM IST

    வக்பு சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது

  • 1 April 2025 2:33 PM IST

    ஏப்.2 முதல் 5 வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 1 April 2025 1:54 PM IST

    சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.2,750 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

  • 1 April 2025 1:01 PM IST

    திரிணாமுல் காங்கிரசார் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் பல்வேறு விவகாரங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

  • 1 April 2025 12:45 PM IST

    கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

  • 1 April 2025 12:38 PM IST

    கோவையில் நூலகம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • 1 April 2025 12:02 PM IST

    ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

    இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

1 More update

Next Story