காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூரில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

1 More update

Next Story