6 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


6 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலை 7 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story