ஸ்வீடனில் பனிப்புயல்: 3 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது.
ஸ்டாக்ஹோம்,
ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. பல நாடுகளில் பனிப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. குறிபாக, ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது. பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





