மருமணி அரைசதம்: நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே


மருமணி அரைசதம்: நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே
x

Image Courtesy: @ZimCricketv

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக மருமணி 50 ரன்கள் எடுத்தார்.

புலவாயோ,

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது. நமீபியா தரப்பில் அதிகபட்சமாக ஜான் நிக்கோல் லோப்டி-ஈடன் 47 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்வ் க்ங்வாரா, பிராட் எவான்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்பே அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 170 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக மருமணி 50 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஜிம்பாப்வே கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 18ம் தேதி நடக்கிறது.

1 More update

Next Story