ஐ.எஸ்.எல். கால்பந்து ; கேரளா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத் ,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு கேரளாவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை . இதனால் ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.
Related Tags :
Next Story