பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@RolexPMasters
ஸ்வெரெவ் காலிறுதியில் மெத்வதேவ் உடன் மோதினார்.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்வெரெவ் (ஜெர்மனி) - மெத்வதேவ் (ரஷியா) மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஸ்வெரெவ் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஸ்வெரெவ் இந்த ஆட்டத்தில் 2-6, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் அரையிறுதியில் ஜானிக் சினெருடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





