வுஹான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கோகோ காப்

image courtesy: twitter/@CincyTennis
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.
பீஜிங்,
வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான கோகோ காப் (அமெரிக்கா) - இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சக நாட்டவரான ஜெசிகா பெகுலா உடன் மோத உள்ளார்.
Related Tags :
Next Story






