நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதே...!


நம்பிக்கையை மட்டும் என்றும் இழக்காதே...!
x
தினத்தந்தி 8 Aug 2023 2:30 PM GMT (Updated: 8 Aug 2023 2:30 PM GMT)

நம் வாழ்வில் எப்போதும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடவேக்கூடாது.

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. அப்போது மெல்லிய காற்று வீசிக் கொண்டு இருந்தது. இதில் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ! காற்று வீசுகின்றது நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.அப்போது சற்று நேரத்தில் காற்று பட்டதும் அணைந்து விட்டது. அன்பு என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்துவிட்டது. அறிவு என்ற 3- வது மெழுகு வர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

4-வது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி வெற்றி பெற்றது. அப்போது அந்த அறையில் சிறுவன் ஒருவன் நுழைந்தான். அடடா 3 மெழுகு வர்த்திகளும் அணைந்து விட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்து கொண்டு இருந்த நான்காவது ெமழுகுவர்த்தி சொன்னது, வருத்தப் படாதே நான் இருக்கின்றேன்.

என்னை வைத்து அணைந்த மூன்று மெழுகுவர்த்திகளையும் பற்ற வைத்துக் கொள் என்றது. சிறுவன் உடனே உன் பெயர் என்ன என்ற கேட்டான். அதற்கு அந்த மெழுகுவர்த்தி நான் நம்பிக்கை என்றது.

அதனால் நம் வாழ்வில் எப்போதும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடவேக்கூடாது.


Next Story