மழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!


மழைநீரை சேகரித்து வருமானமும் ஈட்டலாம்...!
x

நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் புதிய ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

இடநெருக்கடியான வீடுகளில்கூட மாடியில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நிறைய பலன்களைப் பெற முடியும். 750 லிட்டர் அளவு கொண்ட தொட்டியில் மழைநீரைச் சேகரித்தால், அது பெரும் மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும். மாடித்தோட்டத்தில் காய்கறி விளைவிக்கும்போது மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நீருக்குச் செலவழிக்கும் தொகையை குறைக்க முடியும். ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை விளைவிக்க முடியும், இதன் மூலம் வருமானத்தைத்தரும் விஷயமாகவும் மாற்ற முடியும்.

அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகம் நடத்திய இதுதொடர்பான ஆய்வு, அர்பன் வாட்டர் ஜர்னல் என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் 1997 முதல் 2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெய்த மழை, சேகரிக்கப்பட்ட தண்ணீர், அதனால் கிடைத்த விளைவுகள் போன்றவை பரிசீலிக்கப்பட்டன. பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் கிடைத்த தகவல்களைக் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட நீர் வீட்டுத் தேவைக்கும், மாடித் தோட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. மாடித்தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மூலம் வைட்டமின் சத்து கிடைக்கிறது. அந்தக் காய்கறிகளை விற்பதன் மூலம் கூடுதல் வருமானமும் வாழ்க்கைத்தர மேம்பாடும் சாத்தியம் என்கிறது, இந்த ஆய்வு.


Next Story