சளி, இருமலுக்கு...


சளி, இருமலுக்கு...
x

பருவ மழை காலத்தில் சளி, இருமல் பிரச்சினையை தவிர்க்க முடியாது. அவை தொண்டையையும், மார்பகத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். மூக்கடைப்பும் ஏற்பட்டு சுவாச கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே சளி, இருமலின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம்.

* சளி பிரச்சினைக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக தென்படும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கல் உப்பை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். தொண்டை வலியையும் குறைக்கும்.

* சளி, இருமலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் சில நாட்களுக்கு முன்பே எட்டிப்பார்க்கும். அப்போது முதலே வெந்நீர் பருகும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்தும் பருகலாம்.

* மார்பு சளி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்தும் சாப்பிட்டு வரலாம். இதுவும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.

* காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை பொடித்து போட்டு அதனுடன் தேன் கலந்து பருகலாம். அதுவும் தொண்டைக்கு இதளிக்கும்.

* ஏலக்காய் டீயும் பருகலாம். அதுவும் மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீள வைக்கும்.

* இஞ்சியை பொடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகுவதும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.

* சாம்பார் வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடித்துசாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகுவதும் சளி தொந்தரவுக்கு நிவாரணம் தரும்.

* குங்குமப்பூவை பாலுடன் கலந்து பருகி வருவதன் மூலம் சளி தொந்தரவுக்கு தீர்வு காணலாம்.

* மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகுவதும் நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.


Next Story