பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், மொழிப்பெட்டி

பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், 'மொழிப்பெட்டி'

‘‘மொழி அறிவு தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. அதுதான் கலாசாரத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது. ஆனால் உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழிகளாகவே பல உள்ளன. இந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் பேசும் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் உருவானதுதான் மொழிப்பெட்டி’’ என்று பொறுப்பாக பேச தொடங்கினார், ரவிகுமார். இவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆனால், ‘மொழி பாதுகாவலர்' என்பதிலேயே அதிகம் சந்தோஷம் கொள்கிறார். ஆம்..! இவரது முயற்சியினால், அழியும் தருவாயில் இருந்த பழங்குடியின மொழி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாகி வருகிறது.
22 Oct 2022 7:15 AM GMT