உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன - ஜனாதிபதி உரை


உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன - ஜனாதிபதி உரை
x

கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

புதுடெல்லி,

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,.

* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுவார்கள்.

*கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டத்திங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

* வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.

* பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு எடுத்துள்ளது.

* பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றும் அரசு.

* விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

* மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* நாட்டில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன.

* நாட்டின் வளர்ச்சி அடையாமல் இருந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

* எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ன.

* எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

* அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

* அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்.

* நாட்டின் சுதந்திரத்திறாக பாடுபட்ட தியாகிகளின் பெயர்கள் 21 அதமான் தீவுகளுக்கு வைக்கப்பட்டது.

* சுயசார்பு திட்டம் நாட்டு மக்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

* அனைத்து விதமான அடிமைத்தனங்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி

* இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

* உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது அரசு 81-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,

* விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம்.

* 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* அதிகமான மருத்துவக்கல்லூரிகளால் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

* கிராம மக்களுக்கு வேலை, மருத்துவ வசதி உலக வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.

* அதி வேக வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் விமானப்படை

* நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்கள் நவீனத்துவம் பெற்றுகின்றன.

* திருவள்ளூவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.


Next Story