தலைவருடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்


தலைவருடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x

கோட்டூர் பேரூராட்சியில் தலைவருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர், அ.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு கவுன் சிலர் உள்ளனர். இந்த பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலை வர் ராமகிருஷ்ணன் (தி.மு.க.) தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது, கவுன்சிலர் களை கலந்து ஆலோசிக்காமல் தலைவர் தன்னிச்சையாக முடிவு செய்து 2 பணியாளர்களை நியமனம் செய்தது தவறு என்றனர். இதனால் தலைவர் ராமகிருஷ்ணனுக்கும், தி.மு.க. கவுன்சி லர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் கூட்ட அரங்கிற்கு சென்று சமரசம் செய்தனர்.


Next Story