மாவட்ட நிர்வாகிகளிடம் நலம் விசாரித்த நடிகர் சூர்யா


மாவட்ட நிர்வாகிகளிடம் நலம் விசாரித்த நடிகர் சூர்யா
x

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்கு உட்பட்ட 3 மாவட்ட நிர்வாகிகளிடம் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்து, அவர்களின் பணிகளைப் நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story