அப்பவே நாங்க அப்படி...! நீச்சல் உடையில் நடிகைகள்...! எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று! -நடிகை ராதா


அப்பவே நாங்க அப்படி...! நீச்சல் உடையில் நடிகைகள்...! எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று! -நடிகை ராதா
x

42 வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுடன் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை

டைரக்டர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான படம் டிக் டிக் டிக். கமல்ஹாசன், மாதவி, ராதா, ஸ்வப்னா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

ஹாலிவுட் திரில்லர் படங்களின் கலவை என்று விமர்சனங்கள் வந்தாலும் டிக் டிக் டிக் படம் தமிழில் பெரிய வெற்றியை கொடுத்தோடு மட்டுமல்லாமல் பாராதிராஜா இயக்கத்தில் இன்றயளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.

மாடல் அழகிகளின் தொடர் கொலைகளைப் பற்றிய படமான டிக் டிக் டிக் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம், கவர்ச்சிதான். 80-களில் முன்னணி நட்சத்திரங்களான ராதா, மாதவி மற்றும் ஸ்வப்னா ஆகியோர் இந்த படத்தில் தைரியமாக பிகினி காட்சிகளில் நடித்திருந்தனர்.

தமிழ் திரைத்துறையில் இன்று நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது என்பது வெகு சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் 1980-களில் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கதாநாயகிகள் இல்லாமல் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்று தனியாக நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடுவது பெரிய விஷயமாகப் பேசப்படும்.

இதனிடையே 42 ஆண்டுகளுக்குப் பிறகு, ராதா இன்ஸ்டாகிராமில் டிக் டிக் டிக் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசனை சுற்றி நிற்கும் மூன்று கதாநாயகிகளின் இந்த போட்டோ அன்றைய நாளில் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் ராதா அதை தனது இனிமையான நினைவுகளில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். ராதா பிகினி உடை அணிவது எப்படி ஒரு போராட்டமாக இருந்தது என்பதைப் பகிர்ந்துள்ளார். பிகினி படத்திற்கான அவரது சிரமமற்ற தோற்றம் மற்றும் சரியான தோரணைக்காக அவர் நடிகை மாதவியை பாராட்டியுள்ளார்.

டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று. அப்போது அது வேலையின் ஒரு பகுதியாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் இப்போது நான் திரும்பிப் பார்த்தால், அப்படிப் பார்க்க நாங்கள் செய்த போராட்டத்தையும் வலிமையையும் நான் ரசிக்கிறேன், மேலும் அந்த சிரமமற்ற தோற்றத்தை வலதுபுறத்துடன் வைத்திருக்கும் மாதவிக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

அவளது உடலோடு சேர்ந்து அவளது மனப்பான்மையுடன் வேலை செய்ய முடிந்ததற்கு அவளுக்கு வாழ்த்துக்கள். சில நினைவுகள் இப்போது நினைவுக்கு வந்தால், சொல்லப்படாத பல எண்ணங்களை நான் இன்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் வடிவமைப்பாளர் வாணி கணபதி. இந்த அழகான ஆடைகளுக்காக நாங்கள் சரியான கைகளில் இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

1981-ம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ராதாவுக்கு டிக் டிக் டிக் 2-வது படம். அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பாராட்டுக்களை பெற்ற இவர், டிக் டிக் டிக் படத்தில், ராதா பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக நடித்தார், அவர் அவர்களிடம் வேலை செய்யும் மாடல்களைப் பயன்படுத்தி வைரங்களைக் கடத்தும் மாடலிங் ஏஜென்சியால் மரணமடைவார்.

கடைசியாக 1991-ம் ஆண்டு சாந்தி எனது சாந்தி என்ற படத்தில் நடித்த ராதா அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. பல ரியாலிட்டி ஷோக்களில் ஒரு பகுதியாக இருந்தார். அவரது மகள்கள்-கார்த்திகா மற்றும் துளசி-யும் நடிப்பில் களமிறங்கினார்கள். கோ, அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்தவர் கார்த்திகா. மறுபுறம், துளசி மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஜீவாவின் யான் படத்தில் நடித்தார்.




Next Story