போலீஸ் அதிகாரியாக ஆசைப்பட்ட அர்ஜுன்


போலீஸ் அதிகாரியாக ஆசைப்பட்ட அர்ஜுன்
x

ஐதராபாத்தில் அர்ஜுன் அளித்த பேட்டியில் ‘‘நான் போலீஸ் அதிகாரி ஆக ஆசைப்பட்டேன். எதிர்பாராமல் நடிகர் ஆகி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர் அர்ஜுன். இவர் நடித்த முதல்வன் படத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் அர்ஜுன் அளித்த பேட்டியில் ''நான் போலீஸ் அதிகாரி ஆக ஆசைப்பட்டேன். எதிர்பாராமல் நடிகர் ஆகி விட்டேன். என் பிள்ளைகள் எனது பழைய படங்களை பார்த்து கேலி செய்கிறார்கள். ஸ்ரீ ஆஞ்சநேயம் என்னும் தெலுங்கு படத்தில் ஆஞ்சநேயராக நடித்த பிறகு என்னை யார் பார்த்தாலும் கை கூப்பி கும்பிடுவார்கள்.

அதேபோல முதல்வன் படம் பார்த்த நிறைய பேர் நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள் என ஆலோசனை சொன்னார்கள். அந்தப் படத்தில் வருவது போன்ற தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் நினைத்தார்கள். முதலில் முதல்வன் படத்தில் நடிக்க கொஞ்சம் யோசித்தேன். ஆனால் அது எனக்கு மிகவும் நல்ல பெயரை பெற்று தந்தது.

டைரக்டராக வேண்டும் என்று ஆசை உள்ளது. சினிமா நடிகர்களை பற்றி கிசுகிசுக்கள் வந்தால் அவர்களின் குடும்பத்தினர் மிகவும் வேதனைப்படுவார்கள். ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பு வந்தால் அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கிவிடுவேன்" என்றார்.


Next Story