திலீப்புக்கு எதிராக நடிகை புதிய மனு


திலீப்புக்கு எதிராக நடிகை புதிய மனு
x

பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப்புக்கு எதிராக புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் ஜாமீனில் வந்துள்ளார். வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய திலீப் சதி திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திலீப் வக்கீல்களின் 4 செல்போன்களை மும்பை கொண்டு சென்றதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். ஆனால் இன்னும் அவர்களிடம் விசாரிக்கப்படவில்லை.

வருகிற 30-ந் தேதி குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப்புக்கு எதிராக புதிய மனுதாக்கல் செய்துள்ளார். அதில் திலீப்புக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. ஆளும் கட்சியில் உள்ள சிலரும் தொடர்பில் இருக்கிறார்கள். இதன் மூலம் வழக்கை சீர்குலைக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே விசாரணையில் கோர்ட்டு தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story