ஈஸ்டர் பண்டிகை: நடிகர் விஜய் வாழ்த்து


ஈஸ்டர் பண்டிகை: நடிகர் விஜய் வாழ்த்து
x
தினத்தந்தி 31 March 2024 3:34 AM GMT (Updated: 31 March 2024 3:38 AM GMT)

நடிகர் விஜய் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.

இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவருமான விஜய் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,

உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Next Story