பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்


பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்
x

கடந்த 2006ம் ஆண்டு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை பங்கஜ் உதாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

பழம்பெரும் கசல் பாடகர் பங்கஜ் உதாஸ் (வயது 72) இன்று காலை உடல் நிலை குறைவு காரணமாக் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதனால், அவர் யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உடல் நிலை சரியில்லாது இருந்த பங்கஜ் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் நயாப் உதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பத்மஸ்ரீ பங்கஜ் உதாஸ் நீண்டகால நோயின் காரணமாக 26 பிப்ரவரி 2024 அன்று இறந்தார் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் உங்களுக்குத் தெரிவிப்பதில் வருந்துகிறோம் - உதாஸ் குடும்பம் என்று தெரிவித்துள்ளார். பாடகர் பங்கஜ் உதாஸின் இறுதிச் சடங்குகள் நாளை (பிப்ரவரி 27) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு, மத்திய அரசு பங்கஜ் உதாஸ்க்கு இசை மற்றும் கலை உலகிற்கு அவர் செய்த சிறப்பான பங்களிப்பிற்காக மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story