வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது எப்படி? - 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட வீடியோ..!


வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது எப்படி? - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட வீடியோ..!
x

'வந்தியத்தேவன்' கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ள 'வந்தியத்தேவன்' கதாப்பாத்திரத்தின் தோற்றம் வடிவமைக்கப்பட்டது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், அனைவரும் விரும்பும் வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது எப்படி? என்பதை பாருங்கள்" என்று குறிப்பிட்டு, முதல் பாடலான 'அக நக' பாடல் வருகிற 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Next Story