உலக கோப்பையை இந்தியா வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை பரபரப்பு பதிவு


உலக கோப்பையை இந்தியா வென்றால்! கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்.. பிரபல நடிகை பரபரப்பு பதிவு
x

இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார்.

அமராவதி,

இந்தியாவில் 13 -வது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளில் 9 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. 10 -வது வெற்றி இலக்கு நேற்றைய தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின.

ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாச்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இறுதி போட்டியில் பங்கேற்கிறது. இந்திய அணியில் உள்ள ஆட்டக்காரர்கள் அனைவரும் புல் பார்மில் உள்ளதால் இந்த முறை நாம்தான் கப்பை வெல்வோம் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நேரத்தில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ரேகா போஜ் கூறுகையில்,

இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கமெண்ட்டை பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜ் இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன்.நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்றார்.அதற்கு நெட்டிசன்கள், நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வருகிறோம் என்றனர்.

மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் ரேகா போஜ் நடித்துள்ளார்.


Next Story