மதுரையில் தொடங்கும் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு - எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கின்றனர்


மதுரையில் தொடங்கும் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பு - எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிக்கின்றனர்
x

ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜிகர்தண்டா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் வரும் 11-ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story