'காந்தாரா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது


காந்தாரா  திரைப்படம்  ஓடிடியில் வெளியானது
x

காந்தாரா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். , 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, காந்தாரா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது . அமேசான் பிரைமில் இன்று வெளியானது . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story