போண்டா மணியிடம் கூடவே இருந்து குழிபறித்த நபர்...! உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி


போண்டா மணியிடம் கூடவே இருந்து குழிபறித்த நபர்...! உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 Oct 2022 6:20 AM GMT (Updated: 7 Oct 2022 7:04 AM GMT)

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை:

ரஜினிகாந்த், விஜய் உள்பட்ட நடிகர்களுடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி (வயது 59). இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால் சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தமிழக் அரசு மற்றும் நடிகர்கள் என பல்வேறு தர்ப்பினர் உதவி செய்தனர்.

நடிகர் போண்டா மணி சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு உதவுவது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்தார். நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோசடி செய்துள்ளார்.ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.


Next Story