ஆர்ஆர்ஆர் படம் ஓரின சேர்க்கையாளர் படமா...? ரசூல் பூக்குட்டி கருத்தால் சர்ச்சை


ஆர்ஆர்ஆர் படம் ஓரின சேர்க்கையாளர் படமா...? ரசூல் பூக்குட்டி கருத்தால் சர்ச்சை
x

ஆஸ்கர் விருதுபெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, ஸ் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஓரினச்சேர்க்கையாளர்களின் கதை என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திர போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்திருந்தனர். இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படம் தென்னக சவுண்ட் டிசைனர் ரெசூலை கவரவில்லை.

இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சில எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன. இந்த நிலையில் டுவிட்டர் பதிவர் ஒருவர், ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும் குப்பைப் படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தன் பாலின ஈர்ப்பாளர் பற்றிய கதை என்று பதிலளித்தார். அவரது பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் தனது இன்ஸ்டாகிராமில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஓரின சேர்க்கையாளர் காதல் கதைபடம் என குறிப்பிட்டார். படத்தில் ஆலியா பட் ஒரு முட்டுக்கட்டையாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரசூலின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர், மேலும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தெலுங்கு ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில் பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசூல் பூக்குட்டிக்கு அளித்த பதிலில், ஆர்ஆர்ஆர் தன் பாலின ஈர்ப்பாளர் பற்றிய படம் என நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு மோசமான விஷயமா? இதை எப்படி நீங்கள் நியாயப்படுத்த முடியும்? உங்களை போன்ற சாதனியாலர் ஒருவர் மிகவும் தாழ்ந்து போனதில் மிகுந்த ரொம்ப வருத்தமா இருக்கு என கூறி உள்ளார்.

அவருக்கு பதிலளித்த ரசூல் பூக்குட்டி, முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் அது தவறில்லை தான். நான் என் நண்பருக்கு பதிலளித்தேன். மேலும் பொதுவெளியில் பேசப்படுவதைத்தான் நானும் தெரிவித்திருந்தேன். இதனை நீங்கள் இவ்வளவு கவலைக்குரியதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார்.


Next Story