வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது...? சத்குருவிடம் உருக்கமாக கேள்வி எழுப்பிய நடிகை


வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது...? சத்குருவிடம் உருக்கமாக கேள்வி எழுப்பிய நடிகை
x

உலகம் எனக்கு நியாயமாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கக் கூடாதா? என சத்குரு ஜக்கி வாசுதேவிடம் நடிகை சமந்தா கேள்வி எழுப்பினார்.

சென்னை

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இரு மொழிகளிலும் உச்ச நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதோடு ஹாலிவுட் வெப் சீரிஸிலும் கமிட் ஆகியுள்ளார் சமந்தா.

அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக உள்ள சமந்தா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். சமந்தா வெப் சீரிஸ்களில் நடித்த சர்ச்சைக்குரிய காட்சிகளே இருவரின் பிரிவுக்கும் காரணம் என கூறப்படுகிறது. கணவரை பிரிந்த பிறகு நடிகை சமந்தா தனது வேலையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரபல யோகியும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஆன்மிக கலந்துரையாடலில் ஈடுபட்டார் நடிகை சமந்தா. அப்போது ஒரு சிலருக்கு ஏன் வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கிறது? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கர்மப்பலன் என அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? கர்மா நம்மை விட்டு விலகுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

இந்த உலகம் எனக்கு நியாயமாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கக் கூடாதா? என தனது வலிகளையெல்லாம் கொட்டித்தீர்த்தார்.

சமந்தாவின் கேள்விகளை கேட்ட சத்குரு, இன்னமும் இந்த உலகம் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த உலகம் எப்போதும் நியாயத்துடன் இருக்காது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் என்றும் சத்குரு தெரிவித்தார். இந்த உலகம் எப்போதும் இப்படிதான் இருக்கும் என்றும், உங்களின் கேள்வி ஒரு பள்ளிக்குழந்தையின் கேள்வி போல் உள்ளது என்றும் கூறினார் சத்குரு.


Next Story