கொலை மிரட்டல் எதிரொலி : நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி


கொலை மிரட்டல் எதிரொலி : நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
x

Image Courtesy : AFP 

சல்மான் கான் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை போலீஸ் வழங்கியுள்ளது.

மும்பை,

பிரபல இந்திப்பட நடிகர் சல்மான்கான். இவர் தனது குடும்பத்துடன் மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சல்மான் கானிற்கு கடிதம் வாயிலாக மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.

இதையடுத்து சல்மான் கான் பாந்திரா போலீஸ் நிலையம் சென்று கொலை மிரட்டல் விடுத்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் கடந்த மாதம் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி மும்பை காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ விண்ணப்பம் அளித்து இருந்தார். இந்நிலையில் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல் துறை வழங்கியுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்குப் பின்னரே அவருக்கு ஒரு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story