பாலிவுட்-தென்னிந்திய நடிகர்கள் இணைந்தால் ரூ.4,000 கோடி வசூலாகும்- சல்மான் கான்


பாலிவுட்-தென்னிந்திய நடிகர்கள் இணைந்தால் ரூ.4,000 கோடி வசூலாகும்- சல்மான் கான்
x

பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் எளிதில் ரூ. 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

மும்பை

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லுசிபர் படம் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இந்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கானும் நடித்துள்ளார். சல்மான் லூசிபர் படத்தில் பிரித்விராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். இயக்கம் - மோகன்ராஜா. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்த படம் நாளை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது:-

உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. "நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளோம்.

மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள், நான் தென்மாநிலங்களுக்கு செல்ல விரும்புகிறேன்.

பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ. 300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும் என கூறினார்.


Next Story