மலையாளத்தில் முதல் படம் - பகத் பாசிலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா


மலையாளத்தில் முதல் படம் - பகத் பாசிலுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா
x

image courtecy:instagaram@badushanm

விபின் தாஸ் இயக்கும் படத்தில் பகத் பாசிலுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளார்.

சென்னை,

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை புகைப்படம் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது எஸ்.ஜே.சூர்யா மலையாளத்தில் நடிக்கும் முதல் படமாகும்.

முன்னதாக இயக்குனர் விபின் தாஸ் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசியிருந்தார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.


Next Story