சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ராசி கண்ணா


சமூக வலைதளத்தில் இருந்து விலகிய ராசி கண்ணா
x

அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமாடைந்தவர் ராஷி கண்ணா. இவர் நடிப்பில் நேற்று வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'என் ட்விட்டர் கணக்கை செயலிழக்க வைத்துவிட்டேன். இன்ஸ்டாகிராமில் தொடர்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தென்னிந்திய சினிமாவை பற்றி தவறாக கூறியதால் சர்ச்சையில் சிக்கி ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இதுவும் அவர் விலக ஒரு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story