குரல் கலைஞர்களுக்கு விருது


குரல் கலைஞர்களுக்கு விருது
x

ஆரூர்தாஸ் நினைவு விருது சின்மயி, மகாலட்சுமி, சுதா ஆகிய குரல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 8-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் ஒருமனதாக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.மறைந்த மூத்த சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் நினைவு விருது சின்மயி, மகாலட்சுமி, சுதா ஆகிய குரல் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பின் சார்பில் எடிட்டர் ராஜா வெங்கய்யா, ஒளிப்பதிவாளர் பாபு, துணை நடிகர் சங்க தலைவர் கே.வி.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் பம்பாய் கண்ணன், நிறுவனத்தலைவர் எஸ்.வி.சேகர், தலைவர் முரளிகுமார், பொருளாளர் மயிலை குமார், பொதுச்செயலாளர் தாசரதி, துணை தலைவர்கள் ராஜேஸ்வரி, சின்மயி, சசிகுமார் இணை செயலாளர்கள் ஜேம்ஸ்ராப்சன், மதியழகன், ஜெயன், துணை பொருளாளர் சுதா, செயற்குழு உறுப்பினர்கள் தினகர், பிரதாப், அஹமத் ஷியாம், ரகு, ரஞ்சித், ஹரிஹரன், கவிதா, சுபா கணேஷ், பிரேம்குமார், மோஹன், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story