தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் பாரதிராஜா திடீர் அறிவிப்பு

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
“தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியவுடன் இனிமேலும் வி.பி.எப் என்கிற கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் அனைத்து டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பினோம். மாஸ்டரிங் குளோனிங் டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தரமுடியும், திரையரங்கில் உள்ள புரொஜெக்டர் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள் தான் கட்ட வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட அனுமதி வந்தாலும் எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களும் டிஜிட்டல் புரொஜக்சன் நிறுவனங்களும் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் வி.பி.எப் கட்டணத்தை தொடர்ந்து வாங்குவோம் என்று தெரிவித்து உள்ளனர். எனவே அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருங்கிணைந்து வி.பி.எப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும் வரை தங்களின் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வி.பி.எப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வி.பி.எப் கட்டணப் பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களின் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






